காரில் குற்றப்புலனாய்வு இயக்குனர் பெயரில் ஸ்டிக்கர் : சந்தேகத்தின் பேரில் 9 பேரை பிடித்து விசாரணை

கர்நாடக மாநிலம் மங்களூருவில் சந்தேகத்தின் பேரில் 9 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரில் குற்றப்புலனாய்வு இயக்குனர் பெயரில் ஸ்டிக்கர் : சந்தேகத்தின் பேரில் 9 பேரை பிடித்து விசாரணை
x
மங்களுருவில் உள்ள தனியார் விடுதியில் கேரளா, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 9 பேர் தங்கியிருந்தனர். புதிய காருடன் வந்த அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அந்த காரில் தேசிய குற்றப்புலனாய்வு துறை இயக்குனர் என்ற பெயரில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது.  இது குறித்து தகவலறிந்த போலீசார் விடுதிக்கு விரைந்து 9 பேரையும் பிடித்து சென்று ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபட  சதி திட்டம் தீட்டினார்களா  என்று விசாரணை நடைபெற்று வருகிறது. கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு, மைசூர், மங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்த நிலையில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்