கேரளாவில் தொடரும் கனமழை - ரயில்கள் ரத்து
கேரளாவில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கேரளாவில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. புதுச்சேரி - மங்களூர் எக்ஸ்பிரஸ், மங்களுர் - கோவை , கோவை - மங்களூர் எக்ஸ்பிரஸ், உள்ளிட்ட விரைவு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கண்ணுார் கோவை, கோழிக்கோடு - திருச்சூர், உள்ளிட்ட பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல் சில ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
Next Story