நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி இன்று உரை...

நாட்டு மக்களுக்கு, பிரதமர் மோடி இன்று உரையாற்ற இருக்கிறார்.
நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி இன்று உரை...
x
நாட்டு மக்களுக்கு, பிரதமர் மோடி இன்று உரையாற்ற இருக்கிறார். பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, கடந்த செவ்வாய்கிழமை நாடாளுமன்றத்தில், காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் அரசியல் சாசன பிரிவு 370-ஐ திரும்பப் பெறும் தீர்மானம் நிறைவேறியது.  ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவும் நிறைவேற்றப்பட்டது இது தொடர்பாக நாட்டு மக்களுக்கு, பிரதமர் மோடி இன்று விளக்கம் அளித்து உரையாற்றுவர் என  எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 15 ஆம் தேதி டெல்லி செங்கோட்டையில், பிரதமர் உரையாற்ற உள்ள நிலையில், இன்று பிரதமர் உரையாற்ற உள்ளதாக வெளியாகி உள்ள தகவல் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்