வெள்ளத்தில் தத்தளிக்கும் ஹூப்ளி : ஜோத்பூர் விரைவு ரயில் கடக் வழியே இயக்கம்

கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ஹூப்ளியில் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது . அங்கு வெள்ளம் போன்ற சூழ்நிலை காணப்படுகிறது.
வெள்ளத்தில் தத்தளிக்கும் ஹூப்ளி : ஜோத்பூர் விரைவு ரயில் கடக் வழியே இயக்கம்
x
கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ஹூப்ளியில் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது . அங்கு வெள்ளம் போன்ற சூழ்நிலை காணப்படுகிறது. பெங்களூருவில் இருந்து கோலாப்பூர் செல்லும் சென்னம்மா விரைவு ரயில், ஹூப்ளியுடன் நிறுத்தப்பட்டு உள்ளது. ஜோத்பூர் செல்லும் விரைவு ரயில் கடக் வழியாக திருப்பி விடப்பட்டு உள்ளது. பெல்காம், மிராஜ், கோலாப்பூருக்கு செல்லும் பயணிகளுக்கு, அரசுப் பேருந்துகளை தென்மேற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால், குடகு மாவட்டத்தில் இன்றும் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்