புகாரை விசாரிக்காததால் காவல் நிலையத்தில் இளைஞர் தற்கொலை முயற்சி

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள சிங்கராய கொண்டா காவல் நிலையத்தில் நாகராஜ் என்ற இளைஞர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புகாரை விசாரிக்காததால் காவல் நிலையத்தில் இளைஞர் தற்கொலை முயற்சி
x
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள சிங்கராய கொண்டா காவல் நிலையத்தில் நாகராஜ் என்ற இளைஞர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகராஜ் சொத்து தகராறு காரணமாக கடந்த மே மாதம் 14ஆம் தேதி புகார் அளித்துள்ளார். அந்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக  மனம் உடைந்து காணப்பட்ட நாகராஜ், காவல் நிலையத்திற்கு சென்று தனது உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார். நாகராஜுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இது குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Next Story

மேலும் செய்திகள்