சித்தூர் அருகே அரசு பேருந்து - கார் நேருக்கு நேர் மோதல் - சென்னையை சேர்ந்த 4 பேர் பலி

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே அரசு பேருந்தும் காரும் மோதிக்கொண்ட விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.
சித்தூர் அருகே அரசு பேருந்து - கார் நேருக்கு நேர் மோதல் - சென்னையை சேர்ந்த 4 பேர் பலி
x
சென்னை நங்கநல்லூரை சேர்நத முனி கிருஷ்ணா மற்றும் குடும்பத்தினர் திருப்பதி கோயிலுக்கு சென்று விட்டு காரில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். சித்தூர் மாவட்டம் நகரியை அடுத்த கன்ன மெட்டு என்ற இடத்தில் காஞ்சிபுரத்தில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற தமிழக அரசு பேருந்து கார் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் முனி கிருஷ்ண, குமார் உள்ளிட்ட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயம் அடைந்த இருபெண்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக நகரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்