ஆட்சிதுவக்கம் முதல் குதிரை பேரத்தை துவக்கி விட்டது பாஜக - குமாரசாமி

கர்நாடகாவில் கூட்டணி ஆட்சி துவங்கிய நாளில் இருந்தே குதிரை பேரத்தை பாஜக துவக்கி விட்டதாக அம் மாநில முதலமைச்சர் குமாரசாமி குற்றஞ்சாட்டினார்.
ஆட்சிதுவக்கம் முதல் குதிரை பேரத்தை துவக்கி விட்டது பாஜக - குமாரசாமி
x
கர்நாடகாவில் கூட்டணி ஆட்சி துவங்கிய நாளில் இருந்தே, குதிரை பேரத்தை பாஜக துவக்கி விட்டதாக அம் மாநில முதலமைச்சர் குமாரசாமி குற்றஞ்சாட்டினார். சட்டப்பேரவையில், மாலையில் பேசிய அவர்,தாம் அரசியலுக்கு வர வேண்டும் என ஆசைப்பட்டது கிடையாது என்றார்.கர்நாடகாவின் 6 கோடி மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக குறிப்பிட்ட அவர், தாம் முதலமைச்சர் பதவி வகிக்க காரணமான காங்கிரஸ் தலைவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டு உள்ளதாக கூறினார்.கடந்த தேர்தலில் ,யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத போது, கூட்டணி ஆட்சி அமைந்ததை குமாரசாமி சுட்டிக்காட்டினார். சட்டப்பேரவையில், குமாரசாமியின் பேச்சு, மிகவும் உருக்கமாக அமைந்திருந்தது.

Next Story

மேலும் செய்திகள்