புதுச்சேரிக்கு தனிமாநில அந்தஸ்து வழங்கும் விவகாரம் : தற்போதைய நிலையே தொடர மத்திய அரசு முடிவு

புதுச்சேரிக்கு தனிமாநில அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில், தற்போதைய நிலையே தொடர வேண்டுமென முடிவெடுக்கப்பட்டு உள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரிக்கு தனிமாநில அந்தஸ்து வழங்கும் விவகாரம் : தற்போதைய நிலையே தொடர மத்திய அரசு முடிவு
x
புதுச்சேரிக்கு தனிமாநில அந்தஸ்து வழங்கக்கோரி, அம்மாநில சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மக்களவையில் இதுதொடர்பாக புதுச்சேரி தொகுதி உறுப்பினர் வைத்திலிங்கம் எழுப்பிய கேள்விக்கு, உள்துறை இணையமைச்சர் கிஷான் ரெட்டி எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில் தீர்மானத்தை உள்துறை அமைச்சகம் பரிசீலனை செய்ததாகவும்,  இந்த விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர முடிவெடுத்து உள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் தனி மாநில அந்தஸ்து தொடர்பான பரிந்துரைகள் எதுவும் நிலுவையில் இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்