அம்ராபாலி குழுமத்தின் அனைத்து நிறுவனங்களின் பதிவுகளும் ரத்து : உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வு அதிரடி

அம்ராபாலி குழுமத்தின் அனைத்து நிறுவனங்களின் பதிவையும் ரத்து செய்ய உச்சநீதிமன்றம் நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அம்ராபாலி குழுமத்தின் அனைத்து நிறுவனங்களின் பதிவுகளும் ரத்து : உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வு அதிரடி
x
அம்ராபாலி குழுமத்தின் அனைத்து நிறுவனங்களின் பதிவையும் ரத்து செய்ய உச்சநீதிமன்றம் நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. வீடு வாங்குபவர்களின் பணத்தை முறைகேடாக திசை திருப்பியதான அந்த நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டை  விரிவாக விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். கட்டுமானப்பணி முடியாத அம்ராபாலி நிறுவன திட்டப் பணிகளை, தேசிய கட்டட கட்டுமான கழகம் விரைந்து முடித்து, வீடு வாங்க பணம் செலுத்தியவர்களுக்கு வழங்கவும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் மற்றும் இயக்குநர்கள் மீது சட்ட விரோத பணபரிவர்த்தனை முறைகேடு தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தவும் நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்