மும்பை தொலைபேசி இணைப்பக கட்டிடத்தில் தீ விபத்து - 84 பேர் மீட்பு

மும்பை தொலைபேசி இணைப்பக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 80க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
மும்பை தொலைபேசி இணைப்பக கட்டிடத்தில் தீ விபத்து - 84 பேர் மீட்பு
x
மும்பை தொலைபேசி இணைப்பக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 80க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டனர். பாந்த்ரா புறநகர் பகுதியில் உள்ள 9 மாடி கட்டிடத்தின் 3 மற்றும் 4 வது தளங்களில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் உயிர் பிழைக்க கட்டிடத்தின் மேல்பகுதியில் தஞ்சம் அடைந்தனர். பின்னர் அங்கு விரைந்த தீயணைப்பு துறையினர் கட்டிடத்தில் சிக்கியிருந்த 84 பேரை மீட்டனர். மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்