ஐதராபாத் : சாலையோர கிணற்றுக்குள் பாய்ந்த கார்

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில், மருத்துவர்கள் சென்ற கார் ஒன்று, சாலையோர கிணற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
ஐதராபாத் : சாலையோர கிணற்றுக்குள் பாய்ந்த கார்
x
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில், மருத்துவர்கள் சென்ற கார் ஒன்று, சாலையோர கிணற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இருசக்கர வாகனம் மீது மோதாமல் இருப்பதற்காக, காரை திருப்பிய போது, சாரங்கப்பூர் என்ற இடத்தில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தகவல் அறிந்து வந்த போலீசார், பொதுமக்கள் மற்றும் தீயணைப்பு துறை உதவியுடன் காரில் இருந்த 5 மருத்துவர்களை பத்திரமாக காப்பாற்றினர். மேலும் கிணற்றில் இருந்து காரும் மீட்கப்பட்டது. இந்த விபத்தில் லேசான காயங்களுடன் ஐந்து பேரும் உயிர் தப்பினர்.

Next Story

மேலும் செய்திகள்