கேரளாவில் கொட்டி தீர்க்கும் மழை - 3 பேர் பலி

கேரளாவில் பெய்து வரும் கனமழைக்கு 3 பேர் பலியாகியுள்ளனர்.
கேரளாவில் கொட்டி தீர்க்கும் மழை - 3 பேர் பலி
x
கேரளாவில் பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. கோழிக்கோடு, இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. அணைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருதால் பாதுகாப்பு கருதி 4 அணைகள் திறக்கப்பட்டுள்ளன. பம்பை நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் சபரிமலைசெல்லும் பக்தர்களுக்கு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழைக்கு 3 பேர் உயிரிழந்தனர். இதனிடையே பம்பை நதியில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. விழிஞ்ஞம் மற்றும் கொல்லம் மீன்பிடி துறைமுகங்களிலிருந்து மீன் பிடிக்க சென்ற குமரி மாவட்டத்தை சேர்ந்த 5 மீனவர்கள் உள்ளிட்ட 7 மீனவர்கள் கரை திரும்பவில்லை. கொல்லம் மாவட்டம்ஆலப்பாட்டு பகுதியில் கடல் சீற்றத்தால்150 வீடுகளில் கடல் நீர் புகுந்தது. வரும் 23-ம் தேதி வரை கனமழை தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்