புதுச்சேரி : நாகமுத்து மாரியம்மன் கோயில் தேர் பவனி - வடம் பிடித்து முதலமைச்சர் நாராயணசாமி தொடக்கம்

புதுச்சேரியில் பிரசித்திபெற்ற நாகமுத்து மாரியம்மன் கோயில் தேர் பவனியை வடம் பிடித்து முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி : நாகமுத்து மாரியம்மன் கோயில் தேர் பவனி - வடம் பிடித்து முதலமைச்சர் நாராயணசாமி தொடக்கம்
x
புதுச்சேரியில் பிரசித்திபெற்ற நாகமுத்து மாரியம்மன் கோயில் தேர் பவனியை வடம் பிடித்து முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். இக்கோவிலின் 36 ஆம் ஆண்டு விழா கடந்த 8 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான செடல் உற்சவம் மற்றும் தேர்பவனியில் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரை முதலமைச்சர் நாராயணசாமி வடம் பிடித்து இழுத்தார். முன்னதாக ஆயிரகணக்கான பக்தர்கள் அலகு குத்தியும், கார், வேன், லாரி, பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்களை அலகு குத்தி இழுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்