துப்பாக்கிச் சூடு சம்பவ இடத்திற்கு சென்ற பிரியங்கா - போலீசார் அனுமதி மறுப்பு

நாராயண்பூரில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூற சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை போலீசார் அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.
துப்பாக்கிச் சூடு சம்பவ இடத்திற்கு சென்ற பிரியங்கா - போலீசார் அனுமதி மறுப்பு
x
உத்தரப்பிரதேச மாநிலம் நாராயண்பூரில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூற சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை போலீசார் அனுமதிக்கவில்லை  என கூறப்படுகிறது. 4 பேர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என அதிகாரிகள் கூறியதை அடுத்து தரையில் அமர்ந்து பிரியங்கா காந்தி தர்ணாவில் ஈடுபட்டார். எதற்காக அனுமதிக்க மறுக்கிறார்கள் என சொல்லும்வரை இங்கிருந்து செல்லமாட்டேன் என பிரியங்கா கூறியதால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Next Story

மேலும் செய்திகள்