கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு

கர்நாடக மாநில அணையில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு
x
கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அம்மாநில அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்நிலையில் ஒரே வாரத்தில் அணைகளின் நீர் இருப்பும் இரட்டிப்பானது. இதனையடுத்து நேற்று முன்தினம் கர்நாடக விவசாயிகளின் தேவைக்காக 2 ஆயிரத்து 500 கனஅடி நீர் பாசன கால்வாய்களில் திறப்பட்டது.இந்நிலையில் கே.ஆர்.எஸ் அணையில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 500 கனஅடி வீதம் தண்ணீர் திறப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ் அணையிலிருந்து ஏற்கனவே 400 கனஅடி நீர் திறக்கப்படும் நிலையில், தற்போது அது 2 ஆயிரத்து 900 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கபினியில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 600 கனஅடி நீர்  நீர்திறக்கப்பட்டும் நிலையில், ஒட்டு மொத்தமாக 3 ஆயிரத்து 500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்