கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு
கர்நாடக மாநில அணையில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அம்மாநில அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்நிலையில் ஒரே வாரத்தில் அணைகளின் நீர் இருப்பும் இரட்டிப்பானது. இதனையடுத்து நேற்று முன்தினம் கர்நாடக விவசாயிகளின் தேவைக்காக 2 ஆயிரத்து 500 கனஅடி நீர் பாசன கால்வாய்களில் திறப்பட்டது.இந்நிலையில் கே.ஆர்.எஸ் அணையில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 500 கனஅடி வீதம் தண்ணீர் திறப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ் அணையிலிருந்து ஏற்கனவே 400 கனஅடி நீர் திறக்கப்படும் நிலையில், தற்போது அது 2 ஆயிரத்து 900 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கபினியில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 600 கனஅடி நீர் நீர்திறக்கப்பட்டும் நிலையில், ஒட்டு மொத்தமாக 3 ஆயிரத்து 500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
Next Story