வடகிழக்கு மாநிலங்களில் தொடரும் கனமழை : பலி எண்ணிக்கை 97 ஆக உயர்வு

வடகிழக்கு மாநிலங்களில் தொடரும் கனமழைக்கு இதுவரை 97 பேர் உயிரிழந்துள்ளனர்.
வடகிழக்கு மாநிலங்களில் தொடரும் கனமழை : பலி எண்ணிக்கை 97 ஆக உயர்வு
x
வடகிழக்கு மாநிலங்களில் தொடரும் கனமழைக்கு இதுவரை 97 பேர் உயிரிழந்துள்ளனர். பிகார், அசாம் மாநிலங்களில் கனமழை காரணமாக  வீடுகளை இழந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளும் முழுவீச்சில்  நடைபெற்று வருகின்றன.  அசாம் தேசிய பூங்காவில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் வனவிலங்குகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மேடான இடங்களில் தஞ்சமடைந்துள்ள வனவிலங்குகளை, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிலர் வேட்டையாடுவதாகவும் கூறப்படுகிறது. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் சாலைகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளன. நேபாளம், பங்களாதேஷ் நாடுகளும் வெள்ளத்தினால் கடும் பாதிப்பினை சந்தித்துள்ளன.


Next Story

மேலும் செய்திகள்