சூரத்தில் 13 ஆயிரம் வைர தொழிலாளர்கள் வேலை இழப்பு
குஜராத் மாநிலம் சூரத்தில் 13 ஆயிரம் வைர தொழிலாளர்கள் வேலை இழந்து நிற்கின்றனர்.
குஜராத் மாநிலம் சூரத்தில் 13 ஆயிரம் வைர தொழிலாளர்கள் வேலை இழந்து நிற்கின்றனர். வேலை கொடு அல்லது விஷம் கொடு என அவர்கள் ஒருமித்த குரலில் வேதனையுடன் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். வேலை இல்லாததால், குழந்தைகளின் படிப்பு செலவு, வீட்டு வாடகை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு கூட பணம் இல்லாமல் தவிப்பதால், தற்கொலை செய்யவும் துணிந்துள்ளனர். அரசு தலையிட்டு, வேலையின்றி தவிக்கும் குடும்பங்களுக்கு உதவிட வேண்டும் என்பதே அவர்களது பிரதான கோரிக்கையாக உள்ளது.
Next Story