மும்பை கட்டடம் இடிந்து விழுந்த விபத்து : உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி

மும்பையின் தெற்கு பகுதியில் டோங்கிரியில் 100 ஆண்டு பழமைவாய்ந்த கட்டடம் நேற்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
மும்பை கட்டடம் இடிந்து விழுந்த விபத்து : உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி
x
மும்பையின் தெற்கு பகுதியில் டோங்கிரியில் 100 ஆண்டு பழமைவாய்ந்த கட்டடம் நேற்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இடிபாடுகளில் 14 பேர் சிக்கி உயிரிழந்துள்ளனர். 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். எஞ்சியவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்கள் குடும்பத்துக்கு தலா 50 ஆயிரம் நிதியுதவி​யும் அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் அறிவித்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின், மருத்துவ செலவை அரசே ஏற்றுக் கொள்ளும் என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்