மும்பை கட்டடம் இடிந்து விழுந்த விபத்து : உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி
மும்பையின் தெற்கு பகுதியில் டோங்கிரியில் 100 ஆண்டு பழமைவாய்ந்த கட்டடம் நேற்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
மும்பையின் தெற்கு பகுதியில் டோங்கிரியில் 100 ஆண்டு பழமைவாய்ந்த கட்டடம் நேற்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இடிபாடுகளில் 14 பேர் சிக்கி உயிரிழந்துள்ளனர். 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். எஞ்சியவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்கள் குடும்பத்துக்கு தலா 50 ஆயிரம் நிதியுதவியும் அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் அறிவித்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின், மருத்துவ செலவை அரசே ஏற்றுக் கொள்ளும் என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
Next Story