விளையாட்டு ஆசிரியர் தாக்கியதில் மயங்கிய மாணவன் : மாணவனுக்கு சிகிச்சை - போலீசார் விசாரணை

புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர் தாக்கியதில் மயங்கி விழுந்த, 8 ஆம் வகுப்பு மாணவனுக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விளையாட்டு ஆசிரியர் தாக்கியதில் மயங்கிய மாணவன் : மாணவனுக்கு சிகிச்சை - போலீசார் விசாரணை
x
புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர் தாக்கியதில் மயங்கி விழுந்த, 8 ஆம் வகுப்பு மாணவனுக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காந்தி வீதியில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வரும் அபினாஷ் என்ற மாணவர் தலைமுடியை சரியாக திருத்தாமல் வந்ததால் விளையாட்டு ஆசிரியர், அபினாஷை தாக்கியதாக கூறப்படுகிறது. ஆசிரியர் தாக்கியதில் மாணவர் அபினாஷ் பள்ளியிலேயே மயக்கமடைந்துள்ளார். இதனையடுத்து புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர் அபினாஷிக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. மேலும் ஆசியர் தாக்கி மாணவன் மயக்கமடைந்த சம்பவம்  குறித்து பெரியக்கடை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்