புதிய மதுபானக்கடை திறப்பதற்கு எதிர்ப்பு : கடையின் பெயர் பலகையை அகற்றி மக்கள் மறியல்
புதுச்சேரி, மரப்பாலம் பகுதியில் புதியதாக மதுபானக்கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மதுபானக்கடையின் பெயர் பலகையின அகற்றி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி, மரப்பாலம் பகுதியில் புதியதாக மதுபானக்கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மதுபானக்கடையின் பெயர் பலகையின அகற்றி சாலை மறியலில் ஈடுபட்டனர். புதிய மதுபானக்கடை இன்று திறக்கப்பட இருந்த நிலையில், 100க்கும் மேற்பட்டோர் புதுச்சேரி - கடலூர் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அங்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். இதனால் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து எம்.எல்.ஏ ஜெயமூர்த்தி அங்கு வந்து, கடையை திறக்க அனுமதிக்க மாட்டோம் என உறுதியளித்ததை அடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
Next Story