புதுச்சேரி : மருத்துவர்கள் மீது தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மருத்துவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மருத்துவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரியை அடுத்த கரிக்கலாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், சிகிச்சைக்காக வந்தவர் இறந்ததாக கூறி, அவரின் உறவினர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். இதைக் கண்டித்தும், மருத்துவர்கள் மீது தொடரும் வன்முறை சம்பவங்களுக்கு அரசு உடனடியாக தீர்வு காண வலியுறுத்தியும் புதுச்சேரி அரசு தலைமை பொது மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் என 500க்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளையும் அவர்கள் வலியுறுத்தினர்.
Next Story