நாளை இரவு சந்திர கிரகணம் காளஹஸ்தியில் வழக்கம்போல் நடை திறப்பு : காளஹஸ்தி கோயில் நிர்வாகம் அறிவிப்பு
ஆந்திர மாநிலம் காளஹஸ்தி சிவன் கோவிலில், நாளை சந்திர கிரகணத்தின் போது, நடை வழக்கம்போல் திறக்கப்பட்டிருக்கும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஆந்திர மாநிலம் காளஹஸ்தி சிவன் கோவிலில், நாளை சந்திர கிரகணத்தின் போது, நடை வழக்கம்போல் திறக்கப்பட்டிருக்கும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. நாளை நள்ளிரவு ஒரு மணி தொடங்கி, அதிகாலை 4 மணி வரை சந்திர கிரகணம் நடைபெற உள்ளது. இந்த சமயத்தில் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து கோவில்களிலும் நடை அடைக்கப்பட்டு, தோஷ நிவர்த்தி பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு, பின்னர் நடை திறக்கப்படுவது வழக்கமாகும். ஆனால் காளஹஸ்தி சிவன் கோவிலில் மூலவருக்கு கிரகண தோஷம் ஏற்படாது என்பதால், நாளை நடை திறக்கப்பட்டிருக்கும், கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கிரகணம் முடிவுறும் அதிகாலை 4 மணியளவில், கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளனர்.
Next Story