புதுச்சேரி மாணவர்களுக்கு கலை, அறிவியல் மீது மோகம் - கமலக்கண்ணன்

புதுச்சேரியில் புதியதாக வேளாண் பல்கலைக் கழகம் தொடங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அம்மாநில கல்வி அமைச்சர் கமலகண்ணன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாணவர்களுக்கு கலை, அறிவியல் மீது மோகம் - கமலக்கண்ணன்
x
புதுச்சேரியில் புதியதாக வேளாண் பல்கலைக் கழகம் தொடங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அம்மாநில கல்வி அமைச்சர் கமலகண்ணன் தெரிவித்துள்ளார்.புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரி மாநிலத்தில்  உள்ள 6 பாலிடெக்னிக் கல்லூரியில் ஆயிரத்து 512 இடங்களில்  791 இடங்கள் காலியாக உள்ளதாக கூறினார். பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர இம்மாத இறுதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாகவும், தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள்  இந்த இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். புதுச்சேரி மாணவர்களுக்கு  இன்ஜினியரிங் படிப்பின் மீதான மோகம் குறைந்து உள்ளதாகவும்,கலை மற்றும் அறிவியல்  படிப்பில் சேர தற்போது அதிக ஆர்வம் காட்டுவதாகவும் அமைச்சர் கமலகண்ணன் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்