தாசில்தார் வீட்டில் லஞ்ச ஒழிப்புதுறை அதிரடி சோதனை : ரூ. 93 லட்சம் ரொக்கம், 400 கிராம் தங்க நகைகள் பறிமுதல்

தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் லஞ்சம் பெறும்போது அனந்தய்யா என்ற கிராம நிர்வாக அலுவலர் கையும் களவுமாக பிடிபட்டார்.
தாசில்தார் வீட்டில் லஞ்ச ஒழிப்புதுறை அதிரடி சோதனை : ரூ. 93 லட்சம் ரொக்கம், 400 கிராம் தங்க நகைகள் பறிமுதல்
x
தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் லஞ்சம் பெறும்போது அனந்தய்யா என்ற கிராம நிர்வாக அலுவலர் கையும் களவுமாக பிடிபட்டார். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தாசில்தார் லாவண்யா வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 93 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம். 400 கிராம் தங்க நகைள், பல்வேறு சொத்து பத்திரங்கள் ஆகியவற்றை கைப்பற்றினார். இது குறித்து தாசில்தார் லாவண்யாவிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இவர், தெலுங்கானா மாநில அரசின் சிறந்த அதிகாரி விருதை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்