மும்பை கழிவுநீர் கால்வாயில் விழுந்த சிறுவன் : 2-வது நாளாக தேடும் பணி தீவிரம்

மும்பை கோரேகான் நகரில், திறந்த நிலையில் இருந்த சாக்கடை கால்வாயில் விழுந்த 3 வயது சிறுவனை தேடும் பணி 2-வது நாளாக தொடர்கிறது.
மும்பை கழிவுநீர் கால்வாயில் விழுந்த சிறுவன் : 2-வது நாளாக தேடும் பணி தீவிரம்
x
மும்பை கோரேகான் நகரில், திறந்த நிலையில் இருந்த சாக்கடை கால்வாயில் விழுந்த 3 வயது சிறுவனை தேடும் பணி 2-வது நாளாக தொடர்கிறது. அந்த சிறுவன் சாக்கடையில் ஓடிய வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. தற்போது, பெரிய சாக்கடை கால்வாய்களில் தேடும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். சிறுவன் நிலை தெரியாமல் கலக்கத்தில் உள்ள பெற்றோர் மற்றும் உறவினர்கள், மும்பையில் திறந்து கிடக்கும் சாக்கடைகள், மழைநீர் கால்வாய்களை மூட வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்திற்கு வலியுறுத்தியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்