மேடை நடனத்துக்காக ரூ.24 லட்சம் பெற்று மோசடி : நடிகை சோனாக்‌ஷி சின்ஹா மீது வழக்குப் பதிவு

நடிகை சோனாக்‌ஷி சின்ஹா மீது உத்தரபிரதேச மாநிலத்தில் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேடை நடனத்துக்காக ரூ.24 லட்சம் பெற்று மோசடி : நடிகை சோனாக்‌ஷி சின்ஹா மீது வழக்குப் பதிவு
x
நடிகை சோனாக்‌ஷி சின்ஹா மீது உத்தரபிரதேச மாநிலத்தில் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேடை நிகழ்ச்சி நடத்துவதற்காக கடந்த ஆண்டு 24 லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு, நிகழ்ச்சியை நடத்தாமல் ஏமாற்றியதாக அவர் மீது காத்நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா மீது போலீசார் 420 என்ற பிரிவில் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். அவரை விசாரிப்பதற்காக மும்பையில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றதாகவும், அங்கு அவர் இல்லை என்றும் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்