பஞ்சாப் : உணவு சமைக்கும் போது லாரியில் பரவிய தீ

உணவு சமைக்கும் போது லாரியில் தீ பற்றியதால் லாரி முழுவதுமாக எரிந்து நாசமானது.
பஞ்சாப் : உணவு சமைக்கும் போது லாரியில் பரவிய  தீ
x
உணவு சமைக்கும் போது லாரியில் தீ பற்றியதால் லாரி முழுவதுமாக எரிந்து நாசமானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஓசூரில் உள்ள நிறுவனத்துக்கு இரும்பு குழாய்களை அந்த லாரி ஏற்றி வந்துள்ளது. குழாய்களை இறக்கிய பின் ஓசூர் ரிங் ரோடு பகுதியில் லாரியை நிறுத்தி முன்பக்க கேபினில் ஓட்டுநர்கள் சமைத்துள்ளனர். அப்போது திடீரென அருகில் இருந்த பெட்ரோல் கேனுக்கு பரவிய தீயால் லாரியின் முன் பக்கம் முழுவதும் தீ பற்றி எரிய தொடங்கியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இந்த விபத்தால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

Next Story

மேலும் செய்திகள்