பாராபங்கி : இறந்த கணவர் உடலுடன் பெண் பயணம் - வலுகட்டாயமாக இறக்கிவிட்ட நடத்துனர்

உத்தரப்பிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டம் ராம்நகரில், இறந்த கணவர் உடலுடன் பயணித்ததாக கூறி ஒரு பெண் வலுகட்டாயமாக பேருந்தில் இருந்து கீழே இறக்கிவிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாராபங்கி : இறந்த கணவர் உடலுடன் பெண் பயணம் - வலுகட்டாயமாக இறக்கிவிட்ட நடத்துனர்
x
உத்தரப்பிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டம் ராம்நகரில், இறந்த கணவர் உடலுடன் பயணித்ததாக கூறி ஒரு பெண் வலுகட்டாயமாக பேருந்தில் இருந்து கீழே இறக்கிவிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேருந்தில் ஏறும் போது உயிருடன் இருந்த தனது கணவர் திடீரென இறந்துவிட்டதாக அந்த பெண் கதறி அழுதார். பாதி வழியில் இறக்கிவிடப்பட்டதால் செய்வதறியாது தவித்து நின்ற அந்த பெண்ணுக்கு உதவி செய்ய யாரும் முன்வரவில்லை என கூறப்படுகிறது. இரக்கமற்ற பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரின் இந்த செயல், மனிதநேயம் தொலைந்து போனதா என கேள்வி எழுந்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்