மேற்குவங்கம் : மின்சாரம் பாய்ந்து 3 காட்டுயானைகள் பலி

மேற்குவங்க மாநிலம் ஜார்கிராம் மாவட்டம் பின்பூர் கிராமத்தில் காட்டுவழியாக சென்று கொண்டிருந்த போது, மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன.
மேற்குவங்கம் : மின்சாரம் பாய்ந்து 3 காட்டுயானைகள் பலி
x
மேற்குவங்க மாநிலம் ஜார்கிராம் மாவட்டம் பின்பூர் கிராமத்தில் காட்டுவழியாக சென்று கொண்டிருந்த போது, மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன. மிகவும் தாழ்ந்து தொங்கிக் கொண்டிருந்த உயர் அழுத்த மின் கம்பியில் அந்த மூன்று யானைகளின் தந்தங்கள் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இன்று காலை அவ்வழியாக சென்ற கிராமமக்கள், வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட வனத்துறை அதிகாரி, இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்