தெலங்கானா : பெண் வட்டாட்சியர் வீட்டில் ரூ.93.5 லட்சம் பறிமுதல்
தெலங்கானா மாநிலத்தில் பெண் வட்டாட்சியர் வீட்டில் நடந்த சோதனையின் போது 93 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் பணத்தை ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
தெலங்கானா மாநிலத்தில் பெண் வட்டாட்சியர் வீட்டில் நடந்த சோதனையின் போது 93 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் பணத்தை ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். ரங்கா ரெட்டி மாவட்டத்தின் வட்டாட்சியர் லாவண்யா வீட்டில் இருந்து கணக்கில் காட்டப்படாத தங்க ஆபரணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர். இது தொடர்பாக பெண் வட்டாட்சியர் லாவண்யா மீது வழக்கு பதிவு செய்த ஊழல் தடுப்பு பிரிவு போலீசார், இந்த பணம் எப்படி வந்தது என்பது குறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story