ஒரே நாளில் 19 மாநிலங்களில் சிபிஐ அதிரடி சோதனை : நாடு முழுவதும் 110 நகரங்களில் நடைபெற்றது
ஊழல் மற்றும் ஆயுத கடத்தல் தொடர்பாக நாடு முழுவதும் 110 இடங்களில், இன்று சிபிஐ அதிரடி சோதனை மேற்கொண்டது.
தனித்தனியாக பதிவு செய்யப்பட்ட 30 வழக்குகளின் அடிப்படையில், ஊழல் மற்றும் கடத்தல் தொடர்பாக 19 மாநிலங்களில் சிபிஐ அதிரடி சோதனை மேற்கொண்டது. தமிழகத்தில் மதுரை உள்பட, டெல்லி, மும்பை, ஹைதராபாத் என 110 நகரங்களில் ஒரே நேரத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள 30 வழக்குகளில், 16 வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள மோசடி தொகை சுமார் ஆயிரத்து 100 கோடி ரூபாய் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
முன்னதாக கடந்த 2 ஆம் தேதி 12 மாநிலங்களில் 50 இடங்களில் ஒரே நேரத்தில் சிபிஐ சோதனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
Next Story