புதுச்சேரி : நெல்லித் தோப்பு மார்க்கெட்டில் பட்டப்பகலில் மக்கள் முன்னிலையில் கொலை
புதுச்சேரியில் நெல்லித்தோப்பு மார்க்கெட்டில் இன்று காலை 7 மணியளவில், தமிழ்வாணன் என்பவரும் அவருடன் பணியாற்றும் சேகர் என்கிற பாபுவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியில் நெல்லித்தோப்பு மார்க்கெட்டில் இன்று காலை 7 மணியளவில், தமிழ்வாணன் என்பவரும் அவருடன் பணியாற்றும் சேகர் என்கிற பாபுவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த சேகர் ஒரு கட்டத்தில் அருகில் இருந்த கல்லை எடுத்து தமிழ்வாணன் தலையில் போட்டுவிட்டு தப்பியோடி உள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே தமிழ்வாணன் உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், ஒரே இடத்தில வேலை செய்து வந்த நிலையில், இருவருக்கும் மது அருந்தும் பழக்கம் உள்ளதால், அடிக்கடி தகராறு ஏற்படும் என்றும், அப்படி ஏற்பட்ட தகராறில் இந்த கொலை சம்பவம் நடைபெற்றதும் தெரியவந்துள்ளது. கொலை செய்து விட்டு தப்பியோடிய சேகரை போலீசார் தீவிரமாக தேடி வரும் நிலையில், பட்டப்பகலில் மார்க்கெட்டில் மக்கள் முன்னிலையில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story