புதுச்சேரி : சாராயம் விலை உயர்வு - மதுப் பிரியர்கள் அதிர்ச்சி

புதுச்சேரியில் சாராய விலை உயர்ந்திருப்பது, மதுப் பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி : சாராயம் விலை உயர்வு - மதுப் பிரியர்கள் அதிர்ச்சி
x
புதுச்சேரியில் சாராய விலை உயர்ந்திருப்பது, மதுப் பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொத்தம் உள்ள 109 சாராய கடைகள் மற்றும் 90 கள்ளுக்கடைகளும் இயங்கி வருகின்றன. அங்குள்ள சாராய மற்றும் கள்ளுக் கடைகள் கலால் துறையால், ஆன்லைன் மூலம் ஏலம் விடப்படுகிறது. அண்மையில் விடப்பட்ட ஏலம் மூலம், 40 ரூபாயாக இருந்த ஒரு லிட்டர் சாராயத்தின் விலை, சுமார் 5 ரூபாய் 84 காசுகளாக உயர்த்தப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. புதுச்சேரி சாராயம் வடி ஆலை இ-டெண்டர் மூலம், 1 கோடியே 30 லட்சம் லிட்டர் எரிசாராயம் கொள்முதல் செய்யப்படுகிறது. புதிய ஏலத்தின் மூலம் கொள்முதல் விலை உயர்ந்துள்ளதால், மதுப்பிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்