பெண்ணை ஏமாற்றி கர்ப்பத்தை கலைக்க வைத்த இளைஞர் - இளைஞர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிவு
புதுச்சேரியில் பெண்ணை ஏமாற்றி கர்ப்பத்தை கலைக்க வைத்த காங்கிரஸ் பிரமுகர் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி வில்லியனூர் பகுதியை சேர்ந்த தமிழரசன் , மாநில இளைஞர் காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள பிரிவு ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இவரும், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் நெருங்கி பழகி வந்ததால் அந்த பெண் கர்ப்பம் அடைந்தார். வீட்டுக்கு தெரிந்தால் பிரச்சினை ஏற்படும் என்பதால் அந்த பெண்ணை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற தமிழரசன் கருவை கலைத்தார். அதனைத்தொடர்ந்து இருவரும் மீண்டும் உல்லாசமாக இருக்க, அந்த பெண் 2வது முறையாக கர்ப்பமாகினார். இதனை அறிந்த தமிழரசன் மற்றும் அவரது தாய் திருமணத்திற்கு ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்து மீண்டும் கர்ப்பத்தை கலைக்க வைத்துள்ளனர். ஆனால், தமிழரசன் மற்றும் அவரது குடும்பத்தினர், ஏமாற்றுவதை அறிந்த அந்த பெண், மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து தமிழரசன், மற்றும் அவரது தாய், கருவை கலைத்த மருத்துவர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story