புதுச்சேரி : இருசக்கர வாகன திருட்டு- 2 பேர் கைது

புதுச்சேரி புதிய பேருந்து நிலைய பகுதிகளில், இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீஸார் கைது செய்தனர். கடலூர்
புதுச்சேரி : இருசக்கர வாகன திருட்டு- 2 பேர் கைது
x
புதுச்சேரி புதிய பேருந்து நிலைய பகுதிகளில், இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீஸார் கைது செய்தனர். கடலூர் சாலையில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, ராஜ்குமார் என்பவரைப் பிடித்தனர். விசாரணையில், அவர் விழுப்புரம் விக்கிரவாண்டியைச் சேர்ந்தவர் என்பதும், நண்பர் சதீஷ்குமாருடன் இணைந்து வாகன திருட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்தது அவர்களிடம் இருந்து, 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 9 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, இருவரும் கைது செய்யப்பட்டனர். இதேபோல்,  ஐ-போன் போலி உதிரி பாகங்கள் தயாரித்த புகாரில், புதுச்சேரியைச் சேர்ந்த மொபைல் கடை உரிமையாளர் ராம் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்