கர்நாடகா : ஜோதிடர் பேச்சை கேட்டு மகளை கொன்ற தந்தை

பெண் குழந்தையால் குடும்பத்திற்கு கெடுதல் என கூறிய ஜோதிடரின் பேச்சை கேட்டு, அந்த குழந்தையை கழுத்தை நெறித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா : ஜோதிடர் பேச்சை கேட்டு மகளை கொன்ற தந்தை
x
கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டத்தின் புச்சனஹள்ளி கிராமத்தை சேர்ந்த மஞ்சு - சுசித்ரா தம்பதிக்கு கடந்த மாதம் பெண் குழந்தை பிறந்துள்ளது. கர்ப்பம் தரித்த‌து முதலே தனக்கு ஆண் குழந்தை தான் பிறக்கும் என கூறிவந்த மஞ்சுவிற்கு இது பெரிய ஏமாற்றமாக இருந்துள்ளது. இதனால் அவர் குழந்தை பிறந்த‌து முதல் யாரிடமும் பேசாமல் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், பெண் குழந்தையால், குடும்பத்திற்கு கெடுதல் நேரப்போவதாக ஜோதிடர் ஒருவர் கூறியுள்ளார். 

ஜோதிடத்தின் மீது அதீத நம்பிக்கை கொண்ட மஞ்சு, பெண் குழந்தையை கொல்ல முடிவெடுத்துள்ளார். அதன்படி, தொட்டிலில் தூங்கி கொண்டிருந்த குழந்தையின் கழுத்தை நெறித்து, அதன் தந்தை மஞ்சு கொலை செய்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மனைவி சுசித்ரா கூச்சலிடவே, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, மஞ்சு தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து சுசித்ரா அளித்த புகாரின் பேரில் சிக்கமகளூரு புறநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள தந்தை மஞ்சுவை தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்