தென்னை ஏறும் இயந்திரம் அறிமுகம்
கோவையை சேர்ந்த தனியார் பொறியியல் நிறுவனத்துடன் கேரள அரசின் வேளாண்மை துறையும் இணைந்து தென்னை ஏறும் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கோவையை சேர்ந்த தனியார் பொறியியல் நிறுவனத்துடன் கேரள அரசின் வேளாண்மை துறையும் இணைந்து தென்னை ஏறும் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற துவக்க விழாவில் நிதியமைச்சர் தாமஸ் ஐசக் கலந்து கொண்டு இயந்திரத்தை துவக்கி வைத்தார். அப்போது பேசிய அவர், எதிர்காலத்தில் இந்த இயந்திரத்தை கேரள அரசு பொதுத்துறை நிறுவனம் மூலம் தயாரிக்க முயற்சிக்கும் என கூறினார். மேலும், கயிற்றில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மிதியடியும் அறிமுகப்படுத்தப்பட்டது.
Next Story