பீகாரை தாக்கியுள்ள இரட்டைத்துயரம் - 284 பேர் பலி

பீகாரில் சுட்டெரிக்கும் வெயில் கொடுமை மற்றும் மூளைக்காய்ச்சலால் இதுவரை 284 பேர் உயிரிழந்துள்ளனர்.
பீகாரை தாக்கியுள்ள இரட்டைத்துயரம் - 284 பேர் பலி
x
இது பீகார் மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. வடமாநிலங்களில் குறிப்பாக பீகாரில் வெயிலின் தாக்கம் இயல்பை விட மிக அதிகமாகவே உள்ளது. இந்நிலையில், அங்கு சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதுவரை 184 பேர் பலியாகி உள்ளனர். இதில் கடந்த 2 நாட்களில் மட்டும் 113 பேர் பலியாகியுள்ளனர். இதேபோல் கடந்த ஒரு மாதமாக மூளைக்காய்ச்சலும் கடுமையாக தாக்கி வருகிறது. மாநிலத்தில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை தற்போது 100 ஆக அதிகரித்துள்ளது. இதில் முசாபர்பூரில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் 66 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.   


Next Story

மேலும் செய்திகள்