ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் மேடை சரிந்து விபத்து

ஆந்திர மாநிலம் கோகாபுரத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் மேடை சரிந்து விபத்து
x
ஆந்திர மாநிலம் கோகாபுரத்தில் ஒய்.எஸ்.ஆர்.  காங்கிரஸ் கட்சி சார்பில் நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் மலைவாழ் மக்கள் நலத் துறை அமைச்சரும் துணை முதல்வருமான புஷ்பா ஸ்ரீவாணி பங்கேற்றார். அப்போது விழா மேடையில் அதிக அளவு கட்சி தொண்டர்கள் ஏறியதால் திடீரென மேடை சரிந்து விழுந்தது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அனைவரையும் மேடையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.  இதில் துணை முதல்வர் ஸ்ரீவாணி உள்பட அனைவரும் காயமின்றி தப்பினர். இதையடுத்து மேடைக்கு வெளியே நின்றபடி துணை முதல்வர் ஸ்ரீவாணி பேசி விட்டு சென்றார்.

Next Story

மேலும் செய்திகள்