பணி முடிந்து வீடு திரும்பிய பெண் காவலர் கொலை - வெறியுடன் கொலை செய்த சக ஆண் காவலர்
கேரளாவில் பணி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த பெண் காவலரை, கார் மூலம் மோதி, கத்தியால் குத்தி பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழை அருகே வள்ளிக்குந்நு காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சவுமியா என்ற பெண் காவலர் பணி முடித்து தமது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் பின் தொடர்ந்து வந்த சக ஆண் காவலர் அஜாஸ் என்பவர் திடீரென இரு சக்கர வாகனத்தின் மீது காரை மோதினார். இதனால் கீழே விழுந்து பதறிய சவுமியா எழுந்து ஓட முயற்சித்த போது. அஜாஸ் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தி பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்தார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், அஜாசை சுற்றி வளைத்து கைது செய்தனர். கொலை சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Next Story