கர்நாடகா : வாங்கிய கடனை திருப்பி தராததால் ஆத்திரம்... பெண்ணை அடித்து கொன்ற கும்பல்

கர்நாடக மாநிலத்தில் 50 ஆயிரம் ரூபாய் கடனை திருப்பி தராததால், ஒரு பெண்ணை மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா : வாங்கிய கடனை திருப்பி தராததால் ஆத்திரம்... பெண்ணை அடித்து கொன்ற கும்பல்
x
கர்நாடக மாநிலத்தில் 50 ஆயிரம் ரூபாய் கடனை திருப்பி தராததால்,  ஒரு பெண்ணை மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள கொடிகெல்லி கிராமத்தை சேர்ந்த ராஜம்மா என்பவர், அங்குள்ள சிலரிடம் ஓட்டல் தொடங்குவதற்காக கடன் வாங்கியுள்ளார். ஆனால், நஷ்டம் ஏற்பட்டதால், வாங்கிய கடனை திருப்பி தர முடியாத நிலையில், ராஜம்மாளை மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர். இதில் ராஜம்மா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள தவரக்காரே போலீசார், 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

மேலும் செய்திகள்