ஜம்மு- காஷ்மீர் : துப்பாக்கி சண்டை : 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் புல்வாமா நகரில் நடந்த துப்பாக்கி சண்டையில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஜம்மு- காஷ்மீர் : துப்பாக்கி சண்டை : 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
x
லஸ்சிபோரா என்ற நகரில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் பாதுகாப்பு படை வீரர்கள் சுற்றி வளைத்து, தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, இரு தரப்பினர் இடையேயும் பல மணி நேரம் துப்பாக்கி சண்டை நீடித்தது. இந்த சண்டையின் முடிவில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அறிவித்த பாதுகாப்பு படை வீரர்கள் 3 ஏகே ரக துப்பாக்கிகளை பறிமுதல் செய்ததாக தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்