ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பது என்பது முடிந்து போன அத்தியாயம் - கண்ணா லட்சுமி நாராயணா

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பது என்பது முடிந்து போன அத்தியாயம் என அம்மாநில பாஜக மாநில தலைவர் கண்ணா லட்சுமி நாராயணா கூறியுள்ளார்.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பது என்பது முடிந்து போன அத்தியாயம் - கண்ணா லட்சுமி நாராயணா
x
திருப்பதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து ஏராளமானோர் பாஜகவில் இணைந்தனர். இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில தலைவர் கண்ணா லட்சுமி நாராயணா மத்திய பாஜக அரசு செய்த உதவிகளை முதலமைச்சராக இருந்த சந்திரபாபு நாயுடு மறைத்து விட்டதாக கூறினார். ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு ஆகியோர் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து பெற்றுத் தருவதாக கூறி அரசியல் செய்து வருவதாக புகார் கூறினார். மேலும், ஆந்திராவின் வளர்ச்சிக்கு, மத்தய அரசு எப்போது துணை நிற்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்