வாக்கு எண்ணிக்கை முடிவு தாமதமாக வெளியாகும் : புதுச்சேரி ஆட்சியர் அருண் தகவல்

புதுச்சேரி தொகுதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிப்பதில் நள்ளிரவு வரை காலதாமதம் ஏற்படும் என ஆட்சியர் அருண் குறிப்பிட்டார்.
வாக்கு எண்ணிக்கை முடிவு தாமதமாக வெளியாகும் : புதுச்சேரி ஆட்சியர் அருண் தகவல்
x
புதுச்சேரி தொகுதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிப்பதில் நள்ளிரவு வரை காலதாமதம் ஏற்படும் என ஆட்சியர் அருண் குறிப்பிட்டார். வேட்பாளர்களின் முகவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணியினை தொடங்கி வைத்த அவர், செய்தியாளரிடம் பேசுகையில், ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 5 விவிபேட் இயந்திரங்கள் வீதம் ஒப்புகை சீட்டுகள் எண்ணப்படும் எனவும், இதனால் புதுச்சேரியில் காலதாமதம் ஆகும் என்றார். அங்கு, 30 சட்டமன்ற தொகுதிகள் இருப்பதால் 150 விவிபாட் இயந்திரங்களில் எண்ண வேண்டிய சூழல் உள்ளது என்பதால், நள்ளிரவு அல்லது மறுநாள் அதிகாலையில் தான் முடிவு தெரியும் என அவர் தெரிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்