"வாக்குப் பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியாது" - தேர்தல் முன்னாள் ஆணையர் ஓ.பி.ராவத் கருத்து

வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய வாய்ப்பே இல்லை என முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.
வாக்குப் பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியாது - தேர்தல் முன்னாள் ஆணையர் ஓ.பி.ராவத் கருத்து
x
போபாலில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்குப்பதிவு இயந்திரங்கள் உரிய முறையில் பாதுகாக்கப்பட்டு வருவதாகவும், அதனை யாராலும் சேதப்படுத்தவோ, முறைகேடு செய்யவோ வாய்ப்பில்லை என்றும் அவர் கூறினார். வாக்குப்பதிவுக்கு முன், வேட்பாளர்களின் முகவர்கள் கண்ணெதிரில் ஒத்திகை வாக்குப்பதிவு நடைபெறும் என்பதையும் அவர்களுக்கு திருப்தி ஏற்பட்ட பிறகே, வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவதையும் சுட்டிக் காட்டியுள்ளார். மேலும், அரசியல் கட்சி முகவர்களின் முன்பு தான் இயந்திரங்கள் திறக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்படும் என்றும் ஓ.பி.ராவத் குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்