வாக்குப்பதிவு இயந்திரங்கள் 24 மணி நேர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது - இந்திய தலைமை தேர்தல் ஆணையம்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்படுவதாக வரும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் 24 மணி நேர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது - இந்திய தலைமை தேர்தல் ஆணையம்
x
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தலில் பயன்படுத்தப்பட்ட அனைத்து வாக்குப்பதிவு  இயந்திரங்களும் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அனைத்து இயந்திரங்களும் முறைப்படி சீல் வைக்கப்பட்டு, வீடியோ எடுக்கப்பட்டுள்ளதாகவும், இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு தொடர்பாக அரசியல் கட்சி வேட்பாளர்களின் பிரதிநிதிகள் எப்போது வேண்டுமானாலும் பார்வையிடலாம் எனவும் தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்