தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு : நடிகர் விவேக் ஓபராய் சர்ச்சை கருத்து

மக்களவை தேர்தல் முடிவடைந்த நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியானது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு : நடிகர் விவேக் ஓபராய் சர்ச்சை கருத்து
x
மக்களவை தேர்தல் முடிவடைந்த நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியானது. இதனைக் கிண்டல் செய்யும் விதமாக பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், சமூக வலை தளத்தில் படத்துடன் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் நடிகை ஐஸ்வர்யாராய், நடிகர் சல்மான் கானுடன் இருக்கும் புகைப்படத்தை தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு என்றும், ஐஸ்வர்யாராய், விவேக் ஓபராயுடன் இருக்கும் படத்தை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு என்றும், அபிஷேக் பச்சனுடன் இருக்கும் படத்தை இறுதி முடிவு என்றும் பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்தை பகிர்ந்த விவேக் ஓபராய், "ஹாஹா, கிரியேட்டிவ், இதில் அரசியல் இல்லை. இதுதான் வாழ்க்கை எனக் கூறியுள்ளார். இது சர்ச்சையானதை அடுத்து, தேசிய மகளிர் ஆணையம், விவேக் ஓபராய்க்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்