வரதட்சணை கொடுமையால் பெற்ற 2 குழந்தைகளை கிணற்றில் தள்ளிவிட்டு கொலை

வரதட்சணை கொடுமையால் பெற்ற 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வரதட்சணை கொடுமையால் பெற்ற 2 குழந்தைகளை கிணற்றில் தள்ளிவிட்டு கொலை
x
சித்தூர் மாவட்டம் விஜயபுரம் மண்டலம் ஸ்ரீஹரிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி பூர்ணிமா தேவி. இவர்களுக்கு 8 வயதில் மகனும், 6 வயதில் மகளும் உள்ளனர். இந்நிலையில் பூர்ணிமாவுக்கும் மாமியாருக்கும் வரதட்சனை தொடர்பாக அவ்வப்போது பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த பூர்ணிமா தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். வீட்டருகே இருந்த விவசாய கிணற்றில் 2 குழந்தைகளையும் தள்ளிவிட்டு, அருகில் இருந்த மரத்தில் பூர்ணிமா தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். கிராம மக்கள் கொடுத்த தகவலை அடுத்து பூர்ணிமாவின் உடலையும் குழந்தைகளின் உடலையும் போலீசார் மீட்டனர். இதனிடையே ரமேஷ் குடும்பத்தினர் வரதட்சனை கேட்டு தொல்லை கொடுத்ததால் பூர்ணிமா தற்கொலை செய்துக்கொண்டதாக அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து பூர்ணிமா கணவர் குடும்பத்தினரிடம், போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்