துப்புரவு தொழிலாளி நோயாளிக்கு குளுக்கோஸ் பாட்டில் ஏற்றிய அவலம் : சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவும் காட்சி
கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் கொரட்டகரே அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் நோயாளிகளை சரிவர கவனிப்பதில்லை என குற்றச்சாட்டு உள்ளது.
கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம், கொரட்டகரே அரசு மருத்துவமனையில் செவிலியர்கள், நோயாளிகளை சரிவர கவனிப்பதில்லை என குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் இந்த மருத்துவமனையில் உள்ள பெண்கள் வார்டில், துப்புரவு தொழிலாளி ஒருவர், நோயாளிகளுக்கு குளுக்கோஸ் பாட்டிலை மாற்றி விடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் குரல் எழுப்பியுள்ளனர்.
Next Story