விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பறவைகள் பறிமுதல் : 25 கொக்குகள், 15 கிளிகள் பறிமுதல்

புதுச்சேரியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 25 கொக்குகள் 15க்கும் மேற்பட்ட கிளிகள் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பறவைகள் பறிமுதல் : 25 கொக்குகள், 15 கிளிகள் பறிமுதல்
x
புதுச்சேரியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 25 கொக்குகள் 15க்கும் மேற்பட்ட கிளிகள் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். கொக்கு, கிளி, மைனா உள்ளிட்ட பறவைகள் வேட்டையாடப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி கூடப்பாக்கம், ஓதியம்பட்டு உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது சாலையில் 25 க்கும் மேற்பட்ட கொக்குகள், 1 மைனா, 15 க்கும் மேற்பட்ட பச்சை கிளிகளை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. அதிகாரிகளை பார்த்தவுடன் விற்பனையாளர்கள் தப்பி ஓட, பறவைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்